14.03.2013
சிறு கதை
“டாடி, டாடி, நேரமாகிவிட்டது,
எழுந்திருங்கள்,” அவசரமாக எழுப்பினான் யோகேஸ்.
எனக்கு ஒன்றும்
புரியவில்லை.
பாத் ரூமிருக்கு
சென்று ப்ரஸ் மற்றும் பேஸ்ட் எடுத்து பல் துலக்கி, பிறகு காலை கடன்களை எல்லாம் முடித்து
குளிப்பதற்கு தயாரானான்.
குளிப்பதற்கு,
அவனே வெந்நீரை தயார் செய்ய, குவளையில் தண்ணீர் பிடித்து ஸ்டவ் அடுப்பை பற்ற வைக்க,
அம்மாவிடம் எடுத்து சென்றான்.
பிறகு, அவனாக வெந்நீரை
எடுத்து குளித்துவிட்டு, யூனிபார்ம் போடுவதற்குப் பதிலாக, புதிய ஆடை ஒன்றை எடுத்து
அணிந்து கொண்டான்.
தினமும், 8 மணிக்குப் பிறகுதான் எழுந்திருப்பவன், மாறாக, அவசர அவசரமான அவனது செயல், எனக்கு ஒன்றும் புரியாமல், இன்று முதல் மூன்றாம் வகுப்பு படிக்கும் அவனுக்கு ஆண்டு தேர்வு நடக்கவிருப்பதால், படிப்பதற்காக, நேரத்திலேயே எழுந்து ரெடி ஆகிறான் என்று நினைத்துக் கொண்டு, தினசர பத்திரிக்கையில் மூழ்கினேன்.
பிறகு, காலை சிற்றுண்டியாக,
சேமியா உப்புமாவை சாப்பிட அமர்ந்தான். சிறிது நேரத்திலேயே, எனக்கு வேண்டாம் என்ற தோனியில்,
என்னை பார்ப்பது தெரிந்தது.
ஏன், சாப்பிட விருப்பமில்லையா?
என்று நான் கேட்க,
உப்பே இல்லை, போதும்
என்று பதில் வந்தது.
சரி, வைத்துவிடு
என்று கூற, உடனே ப்லேட்டை வைத்துவிட்டு, கை கழுவினான்.
சிரிது நேரத்தில்,
நன்றி என்று அவனது குரல் கேட்டு, திரும்பி பார்த்தால், அவனுக்கு ஒரு பேனா பரிசாக, அம்மாவிடமிருந்து
பெற்றுக் கொண்டிருப்பது தெரிந்தது. பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று, அம்மாவின் குரல்
கேட்டது.
அப்போதுதான் தெரிந்தது,
இன்று அவனது பிறந்த நாள் என்று.
நானும் வெளிக்காட்டிக்
கொள்ளாமல், Many Many Happy Returns of the Day, என்று, எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை
தெரிவித்து கொண்டேன்.
பிறகு, நானும்
ரெடி ஆகி, அவனை பள்ளிக்கு அழைத்து சென்று, நன்றாக பரிட்சை எழுது என்று வாழ்த்தி விட்டு
வந்தேன்.
பிறந்த நாள் பரிசாக,
அன்புள்ள அப்பா,
No comments:
Post a Comment